Friday 31 January 2014

சாய்பிரியாவின் உலகம் "ஒளி'மயமானது...

- எல்.முருகராஜ்

மாற்றம் செய்த நாள்

01பிப்
2014 
03:55
பதிவு செய்த நாள்
பிப் 01,2014 03:48
சாய்பிரியா

சென்னையை சேர்ந்தவர்

நன்கு படித்தவர், படிப்புக்கு ஏற்ற முறையில் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.

ஆனால் படிக்கிற காலம் தொட்டு புகைப்படக்கலையின் மீது ஆர்வம் இருந்துள்ளது. தந்தையின் சிறிய ரக கேமிராவில் எடுத்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டுகளும் பெரிய அளவில் புகைப்பட கலையில் சாதனை புரியவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமிரா வாங்கியவர், தேடுதல் மூலமாக தானே புகைப்படக்கலையை கற்றுத்தேர்ந்தார். புகைப்படத்தின் எல்லா களங்கள் மீதும் இவர் கண் சென்றாலும் "டிராவல் போட்டோகிராபி' என்ற பயண படங்கள் எடுப்பதில்தான் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

வேலை பார்த்துக்கொண்டே பயண படங்கள் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏதாவது ஒரு விஷயத்தை சிரத்தையாக செய்யவேண்டும் என்று எண்ணியவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார்.

பிறகு கேமிராவும் கையுமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து படங்கள் எடுத்துள்ளார். இதில் வடமாநிலத்தில் சமீபத்தில் நடந்த கும்பமேளா போய்வந்த எடுத்த படங்கள் இவருக்கு பெரிதும் பராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.

கங்கையில் குளிக்க இமயமலையில் இருந்து இறங்கிவந்த நிர்வாண சாதுக்கள் உண்மையில் "சாதுவானவர்கள்' கிடையாது மகாகோபக்காரர்கள் அவர்களுக்கு பிடிக்காத முதல் விஷயம் உடை என்றால் இரண்டாவது விஷயம் கேமிரா.
யாராவது தங்களை நெருங்கிவந்து படம் எடுத்தால் கையில் இருக்கும் சூலாயுதம் போன்ற கம்பிகளால் கேமிராவை அடித்துநொறுக்கிவிடுவார்கள், அவர்கள் சுபாவம் அப்படி என்பதால் அவர்களை எதுவும் சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது.

இந்த நிலையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை ஒடும் கங்கை ஆற்று தண்ணீருக்குள் ஒரு தவம் போல கேமிராவில் நின்றபடி காத்திருந்த பிரியாவிற்கு சாதுக்களின் வரம் கிடைத்தது போல யாருக்கும் கிடைக்காத நிறைய படங்கள் கிடைத்தது, அது அவரது மனதிற்கு நிறைவான படங்களாகவும் அமைந்தது.

இதே போல புஷ்கர் ஒட்டகதிருவிழா, கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற மரவாடி எருது ஒட்டும் விழா, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படங்கள் எடுத்துள்ளார். இது போன்ற விழா படங்கள் எடுக்க வெளியூர் போகாத நாட்களில் தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருக்கிறார்.

என் சந்தோஷம், என் விருப்பம், என் எதிர்காலம் எல்லாமே புகைப்படம் எடுப்பதுதான், புகைப்படத்தின் பிரதானமே ஒளிதான், அது போலவே என் உலகமும் ஒளிமயமானதுதான்என்று சொல்லும் சாய்பிரியாவிற்கு புகைப்படக்கலையில் இன்னும் நிறைய சாதிக்கவேண்டும், எடுத்த படங்களை கொண்டு புகைப்பட கண்காட்சி நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கனவுகள் உண்டு, அவை விரைவில் நனவாக வாழ்த்துக்கள்.வாழ்த்த விரும்புபவர்களுக்கு அவரது போன் எண்: 9003073730.


No comments:

Post a Comment