Sunday 6 October 2013

திருமலை மலர்க்கண்காட்சியில்


- எல்.முருகராஜ்

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வண்ணமிகு மலர்கண்காட்சி பார்ப்போர் மனதை கவர்ந்துவருகிறது.

வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள் உள்பட பல்வேறு மலர்களின் அழகு கண்ணைப் பறிக்கிறது.

இயல்பாகவே திருமலையில் நிலவும் குளிரான சீதோஷ்ண சூழ்நிலை காரணமாக மலர்கள் புத்தம் புதிதாக பொலிவு குறையாமல் காணப்படும்.அந்த மலர்களுக்கு விடாமல் தண்ணீர் தெளித்து வருவதால் கூடுதல் பசுமையுடன், கூடுதல் அழகுடன் காணப்படுகிறது. 

துதிக்கையை ஆட்டும் யானை, பறக்கும் பட்டாம்பூச்சி போன்றவை மிகவும் அழகாக இருக்கிறது.

இது போக ஸ்ரீவிஷ்ணுவின் பல்வேறு திருவிளையாடல்கள் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரந்தாமனின் பாற்கடல், திரௌபதியின் கவுரம் காத்த படலம் போன்றவைகளும் அழகுற அமைந்துள்ளது.










இன்னும் பழமையான பல விஷயங்களுடன் திருமலைக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் விதத்தில் உள்ள இந்த மலர்கண்காட்சி பிரம்மோற்சவம் முடியும்வரை (13/10/13) நடைபெறும். திருமலைக்கு வருபவர்கள் கட்டாயம் இந்த மலர்க் கண்காட்சியை பார்த்து செல்லவும் அல்லது இந்த மலர்க்கண்காட்சியை பார்ப்பதற்காகவது திருமலைக்கு வந்து செல்லவும்.

No comments:

Post a Comment